“Mutual Fund ஆபத்தானவை”
இந்த எண்ணம் உங்கள் மனதில் தோன்றியிருக்கக்கூடும் அல்லது யாராவது அதைப் பற்றி எச்சரித்திருந்தால் உங்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், நீங்கள் மட்டுமே இப்படி நினைப்பது இல்லை. ஆபத்து என்றால் பலருக்கு சந்தை வீழ்ச்சிதான் அல்லது கடினமாக சம்பாதித்த பணத்தை இழப்பது என்றுதான் தோன்றும். இந்த பயத்தின் காரணமாகவே, பெரும்பாலும் சேமிப்புக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புத்தொகைகளில் (ஃபிக்ஸட் டெபாசிட்கள்) பணத்தை சேமிக்கிறார்கள். மேலும் இப்படி சேமிப்பது பாதுகாப்பானது, பழக்கமானது மற்றும் வசதியானது என்று உணருகிறார்கள்.
ஆனால் காலப்போக்கில், அப்படி “பாதுகாப்பாக” சேமித்து வைக்கப்பட்ட பணம் அரிதாகவே வளர்ச்சியடைகிறது.
பெரும்பாலான மக்கள் தவறவிடும் ஒரு முக்கியமான உண்மை இங்கே:
மியூச்சுவல் ஃபண்டுகள் (பரஸ்பர நிதிகள்) இயல்பாகவே ஆபத்தானவை அல்ல. அவற்றைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பயத்துக்கான காரணம்.
கட்டுக்கதை 1: மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது ஏதேனும் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது மட்டுமே
இது மிகவும் பொதுவான தவறான கருத்து. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது என்பது ஏதாவது சில பங்குகளை வாங்குவது, அதுவே பலன் அளிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.
நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது:
- உங்கள் பணம் ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டுமல்ல, பல நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது.
- ஒரு தொழில்முறை நிதி மேலாளர் முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கிறார்.
- முதலீடுகள் பல்வேறு துறைகள் மற்றும் சொத்து வகைகளில் பன்முகப்படுத்தப்படுகின்றன.
இது உங்கள் பணத்தை ஒரே எண்ணில் பந்தயம் கட்டுவதற்கும் புத்திசாலித்தனமாக பல எண்களில் கட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. இப்படி பல்வகைப்படுத்தல் என்பது ஆபத்தை நீக்காது, ஆனால் அபாயங்களைக் குறைக்கவும் குறைந்தபட்சமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
கட்டுக்கதை 2: சந்தைகள் ஏறி இறங்குகின்றன, அதனால் நான் பணத்தை இழப்பேன்
ஆம், சந்தைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். அது சாதாரணமானது. சந்தைகள் இப்படித்தான் செயல்படுகின்றன. ஆனால் பெரும்பாலான மக்கள் கவனிக்காமல் விடுவது இதுதான். குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் நீண்ட கால விளைவுகளைத் தீர்மானிப்பதில்லை.
வரலாற்றில், முதலீட்டாளர்கள் என்பவர்கள்:
- முதலீடு செய்து கொண்டே இருந்தவர்கள்
- சந்தை வீழ்ச்சியின் போது தொடர்ந்து எஸ்.ஐ.பி.,களை (SIP) முதலீடு செய்தவர்கள்
- சந்தை வீழ்ச்சியின் போது பீதி அடையாதவர்கள்
இப்படியான முதலீட்டாளர்கள்தான் காலப்போக்கில் வெகுமதி பெற்றனர். உண்மையான ஆபத்து சந்தை எப்படி செயல்படுகிறது என்பதில் அல்ல. உண்மையான ஆபத்து அதற்கு உணர்ச்சிபூர்வமாக எதிர்வினையாற்றுவதாகும்.
கட்டுக்கதை 3: மியூச்சுவல் ஃபண்டுகள் நிபுணர்களுக்கு மட்டுமே
நீங்கள் சந்தைகளை தினமும் கண்காணிக்க வேண்டியதில்லை. நீங்கள் பேலன்ஸ் ஷீட்டுகளை படிக்க வேண்டியதில்லை. உலகப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
உங்களுக்கு உண்மையில் தேவைப்படுவது:
- தெளிவான இலக்குகள் (வீடு, குழந்தையின் கல்வி, ஓய்வூதியம்)
- காலம்
- உங்கள் ஆபத்து வசதியுடன் பொருந்தக்கூடிய நிதிகள்
சரியான வழிகாட்டுதல் மற்றும் கட்டமைப்பு இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எளிமையாகவும் முறையாகவும் மாறும், குழப்பமாக இருக்காது.
உண்மையான ஆபத்து:
- குறைந்த வருமானம் கிடைக்கும் சேமிப்பு திட்டங்களில் பணத்தை செயலற்ற நிலையில் வைத்திருத்தல்
- பணவீக்கம் காரணமாக வாங்கும் சக்தியை இழத்தல்
- பயம் காரணமாக அதிக காலம் காத்திருத்தல்
பணவீக்கம் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சேமிப்பை அமைதியாக விழுங்குகிறது. இன்று “பாதுகாப்பானது” என்று உணரும் பணம் நாளை உங்கள் முக்கிய இலக்குகளுக்கு உதவாமல் போகலாம். முதலீடு செய்யாமல் இருப்பது மட்டுமல்ல, மெதுவாக, அமைதியாக இருப்பதும் ஆபத்து தான்.
எனவே… மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆபத்தானவையா?
நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் மியூச்சுவல் ஃபண்ட்கள் சந்தை அபாயங்களைக் கொண்டுள்ளன. ஆனால், அபாயங்களை நிர்வகிக்க முடியும்
எப்படி?
- Diversification மூலம்
- நீண்ட கால முதலீடு மூலம்
- ஒழுங்குபடுத்தப்பட்ட எஸ்.ஐ.பி.,கள் மூலம்
- உங்கள் ஆபத்து சுயவிவரத்திற்கு ஏற்ற நிதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்
திட்டமிடப்பட்டு சரியாக சீரமைக்கப்படும்போது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செல்வத்தை உருவாக்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறும். இப்படி யோசித்துப் பாருங்கள், கார் ஓட்டுவது மட்டும் ஆபத்தானது அல்ல. விதிகள் தெரியாமல், சீட் பெல்ட் இல்லாமல் அல்லது தவறான வேகத்தில் ஓட்டுவதும் ஆபத்தானது.
மியூச்சுவல் பண்ட் முதலீடும் அதே வழியில் செயல்படுகிறது.
- சரியான புரிதல்
- தெளிவான இலக்குகள்
- சரியான வழிகாட்டுதல்
இல்லாதவர்கள் ஆபத்தை உணர்கிறார்கள். சரியான அணுகுமுறையுடன் செயல்பட்டால், மியூச்சுவல் ஃபண்ட்கள் காலப்போக்கில் செல்வத்தை உருவாக்குவதற்கான மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாக மாறுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டுகள் இன்னும் ஆபத்தானதாகத் தோன்றினால், பிரச்சனை அதில் இல்லை. நமக்கு தெளிவின்மைதான் காரணம்.
- சந்தைக்கு என நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.
- சிறந்த செயல்திறன் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட்களை நீங்கள் துரத்த வேண்டியதில்லை.
- நீங்கள் செய்ய வேண்டியது, இது எனக்கும் எனது இலக்குகளுக்கும் பொருந்துமா என்பதை தான் பார்க்க வேண்டும்.
Milestones2Wealth-ஐ பொறுத்தவரை, புத்திசாலித்தனமான முதலீடு என்பது ஆபத்தைத் தவிர்ப்பது அல்ல. அதைப் புரிந்துகொள்வது மற்றும் நிதானமாக நிர்வகிப்பது பற்றியது என்று நாங்கள் நம்புகிறோம்.
உங்கள் தற்போதைய முதலீடுகள் உண்மையில் உங்கள் இலக்குகளுடன் பொருந்துமா என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அல்லது பயம் காரணமாக நீங்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தால், வாருங்கள் பேசலாம். அந்த பயத்திலிருந்து வெளியே வந்து உங்கள் முதலீட்டு பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.


